Saturday, September 25, 2010

தடுப்பூசி பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்குமா ?

இதுவரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இறந்தவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து நபர்கள் .

இந்த நோயால் பாதிப்பு வராமல் தடுக்க தற்போது தடுப்பூசி போடப்படுகிறது

இதற்கு பரிந்துரை செய்தது எந்த மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி ?

தடுப்பூசி திட்டத்துக்காக தமிழக அரசு ஒதுக்கிய தொகை 300 கோடி .

நாளிதழில் எதிர் கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா விட்ட ஒரு அறிக்கைக்கு பதில் சொல்லும் விதமாக முதல்வர் உடனடியாக ருபாய் 300 கோடி தொகையை ஒதுக்கியதன் பின்னணி என்ன ?மக்கள் நலமா அல்லது அரசியலா ?

திட்டத்தால் பலன் அடைவது சாதாரண மனிதனா அல்லது மருந்து உற்பத்தி செய்யும் முதலாளிகளா ?

தமிழக சட்டசபையில் முதலில் விவாதிக்க வேண்டிய விஷத்தை எந்த விவாதமும் இல்லாமல் நடைமுறை படுத்த வேண்டிய அவசியம் என்ன ?

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எத்தனை சதவிகிதம் பேருக்கு நோய் வராது?

இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை ஊசி போட்ட நான்கு குழந்தைகள் இறந்ததுபோல்அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள் ?தமிழக அரசா அல்லது மருந்து உற்பத்தி நிறுவனமா ?

தடுப்போசி போடும் முன் தங்களது குடும்ப மருத்துவரை ஆலோசனை செய்து கொள்வது நல்லது .

வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யவும்

No comments:

Post a Comment