Thursday, November 20, 2014

உருப்பட ஒரே வழி

வேலைய மட்டும் செய்தால்  வாழ்க்கைய  கூட ஓட்ட முடியாது ,கூடவே அதிகமா  வேலை செய்யற மாதிரி பாவனையும் காட்டுனா உலகத்தையே ஓட்டிட்டு போயிடலாம்

வாசித்ததில் பிடித்தது - 1

ஏர் ஓட்றமா., ஏரோப்பிளேன் ஓட்றமாங்கறது
முக்கியமில்ல., ஒழுங்கா ஒட்றமாங்கறது தான்
முக்கியம்..

(பிளாக்கர் வெங்கட் சொன்னது)

Saturday, September 10, 2011

இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். ஆனால், இன்று எல்லா வீடுகளிலும் ஆண்களும் பெண்களும் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே எழுத்துகளை, ஆங்கிலம், தமிழ் என அறிமுகம் செய்கிறார்கள். பொம்மைகளை, படங்களைக் கொடுத்துக் கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் வீட்டுப் பாடங்களைக்கூட சொல்லித் தருவதும், தானே போட்டுத் தருவதுமான வேலைகளையும் செய்யும் பெற்றோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவர்களே குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகிவிடுகிறார்கள். இதனாலேயே பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரிகளாக, எதிர் ஆளுமைகளாக மாறிப்போகிறார்கள்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி எல்லாமும் இப்போது தாய், தந்தை, ஆசிரியர் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாடம் முழுவதையும் சொல்லித்தர குறுந்தகடுகள் வந்தாகிவிட்டன. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் அதே பாடங்களை அப்படியே நடத்தும் அளவுக்கு இதன் தரம் இருக்கிறது. மேலும் ஒரு வகுப்பறையில் இருந்துகொண்டு, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் வகையில் கணினியுடன் கூடிய வகுப்பறைகள் இன்று அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. அப்படியானால் யாரை ஆசிரியர் யாரை நல்லாசிரியர் எனக்கொள்வது?

ஒரு மாணவர் பள்ளியை விட்டு வெளியே சென்று சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆசிரியர்களின் பெயரை நன்றியுடன் நினைவுகூர்கின்றாரோ, எத்தனை பேரை அவர் திசை நோக்கி வணங்க நினைக்கின்றாரோ, தன் குழந்தைகளை ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கும்போது தனக்கு வாய்த்த ஆசிரியர் போல தன் மகன், மகளுக்கும் கிடைக்கமாட்டாரா என்று எந்த ஆசிரியரை நினைத்து மனம் ஏங்குகின்றதோ அவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். இந்த அளவுகோலில் வருவோர் மட்டுமே நிஜமான, நிச்சயமான நல்லாசிரியர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் நிச்சயமாக மத்திய, மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களைப் போன்றவர்களால்தான் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் நன்றி சொல்லிக்கொண்டு முன்னேறிச் செல்கிறது.

இந்தவிதமான ஆசிரியர்களை ஒரு மனிதன் பின்னாளில் நினைக்கக் காரணம் என்ன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவரா அல்லது அவரது வகுப்பு வந்தாலே பயங்கர ஜாலி என்பதாலா அல்லது அவர் அன்பாகப் பழகினாரா, எதனால் அவரை மனம் தேடுகிறது?

எல்லா ஆசிரியர்களும் கற்பித்தல் பணியைச் செய்தாலும் ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது. அறிவை வழங்குபவர், அறிவைப் புகட்டுபவர், அறிவைத் துலக்குபவர்.

அறிவை வழங்கும் ஆசிரியர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடத்தைத் திரும்பவும் அதே அளவில், அதே தரத்தில் மாற்றமின்றி மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அறிவைப்புகட்டுபவரின் பணி இன்னும் சுவையானதாக , பிடிக்காத உணவையும் ஊட்டி விடும் சாமர்த்தியம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வகை ஆசிரியர்கள் ஒரு மாணவரின் உள்ளே இருக்கும் திறமையை அவரே பார்க்கும்படியாகத் துலக்கி, பளபளப்பாக்கி விடுவார். அந்தத் தன்னொளி வழியில் அந்த மாணவர் நடந்து வாழ்க்கையில் பலபடி மேலே செல்வார். அப்படியாக ஒவ்வொருவரும் தனது அறிவின் ஒளியைத் துலக்கிக் காட்டியவர்களை எண்ணிப் பார்க்கிறார்கள். இது பள்ளி வகுப்பறையில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. இவர்கள்தான் உண்மையிலேயே குரு. ஒரு மனிதனை அவருக்கே அடையாளம் காட்டுவதுதான் குருவின் பணியாக இருக்கிறது.

இத்தகைய ஆசான்கள்தான் ஒரு மனிதன் தன் தாய் தந்தையை மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதும், சமூகத்தில் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் அறவாழ்வு வாழ்வதும், அனைவரையும் அன்பு செய்வதும் நமக்கு உள்ளே எப்போதுமே இருந்து வருகின்ற ஒளி என்பதை, அறிவைத் துலக்கி வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள் .

இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

Friday, January 7, 2011

வரவேற்கிறோம் புதிய கல்லூரியை ...


தமிழக அரசு ஆண்டுதோறும் சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாவட்டம் தோறும் திறக்கிறது .அந்த வகையில் எங்கள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராம பகுதியில் ஒரு கல்லூரி உதயமாகிறது .

இன்றைய தமிழக ஆளுநர்,ஆளுநர் உரையில் இதை தெரிவுத்துள்ளார். இனி வரும் காலங்களில் பின் தங்கிய ஏழை எளிய மக்கள் குடும்பத்தில் இருந்து பல படித்த நாட்டை உயர்த்தும் கைகள் தயாராகிறது...

வரவேற்கிறோம் எங்கள் புதிய கல்லூரியை !!

"நாமும் வளர்வோம் நாட்டையும் உயர்த்துவோம் "

யாரை நம்பி அடுத்த தலைமுறை ? கலாம்


நம் ஒவ்வொரு செயலும் தனிமனித முன்னேற்றம் மட்டும் அல்லாது நம் தேசத்தின் முன்னேற்றம்.அந்த வகையில் நம்மில் பலரின் முன்னோடியான டாக்டர்
அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முயல்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை கொண்டு சொல்லும்.

நேற்று ஒரு தனியார் நிர்வாக மேலாண்மை நிறுவன ஆண்டு விழாவில் பேசிய கலாம் "திறமை, உயர் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்

நேற்று ஒரு தனியார் நிர்வாக மேலாண்மை நிறுவன ஆண்டு விழாவில் பேசிய கலாம் "திறமை, உயர் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்
இந்தியா இயற்கை வளத்தை மட்டும் அல்லாமல் மகப் பெரிய மனித வளத்தையும் பெற்றுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு 30 லட்சம் பேர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு வேலைதேடுவோர் 70 லட்சம் பேர்.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு கோடி மாணவர்கள் வேலை தேடுகின்றனர். இருந்தபோதும் போதிய திறன் பெற்ற பணியாளர் கிடைப்பது தொடர்ந்து மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த இடைவெளியைப் போக்க கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். கலந்துரையாடல் முறையில் சுயமாக கற்றுக் கொள்ளுதல், சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.

அப்போதுதான் படித்து முடித்து வெளிவரும் இளஞர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற்ற முடியும்.

Monday, January 3, 2011

என்று தனியும் எங்களுக்கு வழங்கும் இலவசம் !

இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

÷இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது.

÷இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் முதல்வரின் இந்தப் பேச்சும் அமைந்திருக்கிறது. ÷இலவசங்களை வழங்கும் அரசுகள் இந்த இலவசங்கள் உண்மையில் மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தில், பலர் தங்களது வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்த போதிலும் அரசு கொடுத்த டி.வி.யை வாங்கி, அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். மேலும், சிலர் வீட்டினுள் பத்திரப்படுத்தியுள்ளனர்.

÷இதனால், யாருக்கு என்ன பயன் ஏற்பட்டுவிட்டது. மின்சாரச் செலவு கூடுதலானதும், கேபிள் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தியதோடு, குறிப்பிட்ட சில டி.வி. சானல்களின் ரேட்டிங் உயர்வுக்கு மட்டுமே இந்தத் திட்டம் உதவியுள்ளது. அதேநேரத்தில், இலவச டி.வி.க்காக வழங்கப்பட்ட தொகையைத் தொழிற்துறையில் செலவிட்டிருந்தால் பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும்.

÷உதாரணமாக, 1,500 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு கிராமத்தில் இலவச டி.வி.க்காக அரசு தோராயமாக ரூ. 37.50 லட்சம் செலவிடுகிறது. இந்தத் தொகையின் மூலமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கும். விவசாயிகளுக்கும் தங்கள் தொழில் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

÷இலவசமாகக் கொடுக்கப்படும் பொருள் நமது வரிப் பணத்திலிருந்தும், நமது தலையை அடமானமாக வைத்து நபார்டு வங்கி, உலக வங்கி மற்றும் தனியார் நிதிநிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தொகைதான் என்பது நமக்கு மறைக்கப்படுகிறது.

இதை உணர்ந்தவர்களும், பணக்காரர்களும் அரசின் இலவசங்கள் நமது பணம்தான் என்பதால் அதைப் பெறுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. இதனால்தான் சென்னையில் சுனாமி தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையைப் பெறுவதற்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உயிரிழந்தவர்களில் பணக்காரர்களும் இடம் பெற்றிருந்தனர்.

÷இலவசம் என்பது ஒரு நாட்டின் கெüரவக் குறைச்சல் என்பதை பள்ளியில் நாம் படிக்கும்போது பாட்டி கதை மூலமாக விளக்குவார்கள். அந்தக் கதை இப்போது நமக்குத் தேவையாக இருக்கிறது. ""ஒரு மன்னன், பக்கத்து நாட்டு மன்னனைச் சந்தித்தபோது, தனது நாட்டைப்பற்றிப் பெருமையாகக் கூறினான். தனது நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அன்னசத்திரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதில், தினமும் ஏராளமானவர்கள் உணவருந்துகிறார்கள். அதேபோல, என்னைப் பார்ப்பதற்காக தினமும் வரும் ஏழைகளுக்குப் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குகிறேன். அதை அவர்கள் தினமும் பெற்றுச் செல்கிறார்கள். இதைப் பெறுவதற்காக அவர்கள் என் அரண்மனை முன் தினமும் காத்திருப்பார்கள்'' என்று பெருமைப்பட்டான்.

÷அதற்கு மற்றொரு மன்னன், ""என் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை. அவரவர்கள் உழைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். அதற்குத் தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கிறது என்றானாம். அதன்பிறகுதான், தற்பெருமை பேசிய அரசனுக்கு நமது குடியின் கீழிருக்கும் மக்களைப் பிச்சைக்காரர்களாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தான்'' என்று பாட்டி கதை கேட்டிருக்கிறோம்.

÷இப்போது நமது நாட்டில் அன்னசத்திரங்களும், அரசின் இலவசத் திட்டங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இது அரசின் வளர்ச்சியல்ல. மக்களின் வறுமைக்கோடு உயர்ந்துகொண்டே செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

÷தமிழகத்தில் 2010-ம் ஆண்டு கணக்கின்படி தோராயமாக 6.63 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில், தற்போது தமிழக அரசு வழங்கும் இலவச, வேஷ்டி சேலை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் தமிழகத்தில் 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இவ்வளவு மக்களும், அவர்களின் குடும்பங்களும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாகத்தானே தமிழக அரசு கூறுகிறது.

÷இவ்வாறு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும்போது, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களைத் தீட்டினால்தான் அவர்களின் வாழ்வு உயரும். அதைவிட்டு, இலவசத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்காக வாங்கப்படும் கடன் தொகை அரசை நெருக்கும்போது அரசே திவாலாகும் நிலை ஏற்படும்.

÷இவ்வாறு திவாலாகும் நிலையைத் தடுக்க அரசு கையிலெடுத்திருக்கும் மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்றவற்றால் மக்களின் உடல்நலமும், இயற்கை வாழ்வாதாரமும் கெட்டு, தமிழக மக்கள் உண்மையில் இலவசங்களையும், அரசின் நிரந்தர உதவியையும் மட்டுமே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

÷கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் மானியத் தொகை குறைவால், ஒரு வேளை உணவாவது நிம்மதியாகச் சாப்பிட்ட ஏழைத் தொழிலாளிகூட, தான் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதே நிலை தொடரும்போது, குடியிருக்கும் வீட்டை நிலத்துடன் விற்றுவிட்டு அரசின் இலவசத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

÷எனவே, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற எண்ணத்தைத் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைவிட்டுவிட்டு, ஏழைகள் இலவசங்களைப் பெறுவதற்காகப் பிறந்தவர்கள் அல்லர் என்பதை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் திட்டங்களைத் தீட்ட முன்வந்தால்தான் தமிழகம் உண்மையான வளர்ச்சியை எட்டும்.

நன்றி தினமணி

Tuesday, December 7, 2010

இவர் தான் அந்த ஜி ?


கூகுள் இணையதளத்தில் 2ஜி என உள்ளிட்டுத் தேடினால், நொடிக்கும் குறைவான நேரத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து கொட்டுகின்றன. கூகுளில் இந்தி நடிகர் ஷாருக்கானை விடவும் 2ஜி 29 மடங்கு பிரபலம்; ரஜினிகாந்தை விட 17 மடங்கு! 2ஜி எந்த அளவுக்குப் பிரபலமோ அந்த அளவுக்கு ஊழலிலும் 2ஜியை விஞ்ச எதுவும் இல்லை போலிருக்கிறதே.

மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர் என்று கடந்த 24-ம் தேதி அவருக்கு "அக்மார்க்' சான்றிதழ் வழங்கியிருப்பது யார் தெரியுமா? சோனியா காந்திதான், வேறு யார்? அத்தோடு விட்டாரா என்றால் அதுதான் இல்லை. "நான் ஊழலைப் பொறுக்காதவள்' என்று ஒரு அண்டப்புளுகையையும் அடுத்த நாளே அவிழ்த்துவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்படும் அலைக்கற்றை என்பது ஒருவகையான மின்காந்த அலையைக் குறிப்பது. செல்போனில் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும், கணினிகளை இணைப்பதற்கும் ஸ்பெக்ட்ரம் பயன்படுகிறது. இது நாட்டின் சொத்து.

2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 2008-ம் ஆண்டு இதை விற்பனை செய்து நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதுடன் ஒரு சிலர் லாபம் ஈட்டியதுதான் இந்த மோசடியின் பின்னணி.

2001-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட 8 ஆண்டுகளின் பணவீக்க வேறுபாடு மட்டுமே இழப்பு அல்ல. நகருக்கு நடுவே 2001-ம் ஆண்டு வாங்கிய நிலத்தை, அதே விலைக்கு 2008-ம் ஆண்டில் விற்பதைப் போன்றதுதான் அன்றைய முறையைப் பின்பற்றி அதே விலை நிர்ணயத்தில் இப்போது அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்திருப்பது.

2008-ம் ஆண்டில் மட்டுமே பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 20 மடங்கு உயர்ந்தன என்றால் 8 ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

தனது செயலை நியாயப்படுத்தும் ஆ.ராசா, 2001-ம் ஆண்டின் விலையிலேயே 2003 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது தனது செயலை நியாயப்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா முன்வைக்கும் நொண்டி வாதம் இது.

2003-ம் ஆண்டில் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 5 பேர்தான் செல்போன் வைத்திருந்தார்கள். மொத்தமே தொலைபேசி வைத்திருந்த இந்தியர்கள் 1.3 கோடி பேர்தான். 2006-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தையே சந்தித்து வந்தன. அரசு உதவிக்கு ஏங்கிக் கிடந்தன.

ஆனால், 2003-க்கும் 2008-க்கும் இடையே நிலைமை மாறியது. தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 14 மடங்கு உயர்ந்தது. தொலைத்தொடர்பு வருவாய் 4 மடங்கு அதிகமானது. அந்தத் துறையின் பங்குகள் 4.4 மடங்கு உயர்ந்தன.

2001-ல் செல்போன் வைத்திருந்தோரின் எண்ணிக்கை வெறும் 30 லட்சம்தான். அது 2003-ல் 1.3 கோடியானது. 2008-ம் ஆண்டில் அதுவே 18 கோடியானது. இப்போது 68.8கோடி. 2003-ம் ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகம். 2003-ம் ஆண்டில் 48 ஆயிரம் கோடியாக இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய், 2008-ம் ஆண்டில் 1.69 லட்சம் கோடியானது.

2008-ம் ஆண்டில் மட்டுமே பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 20 மடங்கு உயர்ந்தன என்றால் 8 ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

தனது செயலை நியாயப்படுத்தும் ஆ.ராசா, 2001-ம் ஆண்டின் விலையிலேயே 2003 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது தனது செயலை நியாயப்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா முன்வைக்கும் நொண்டி வாதம் இது.

2003-ம் ஆண்டில் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 5 பேர்தான் செல்போன் வைத்திருந்தார்கள். மொத்தமே தொலைபேசி வைத்திருந்த இந்தியர்கள் 1.3 கோடி பேர்தான். 2006-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தையே சந்தித்து வந்தன. அரசு உதவிக்கு ஏங்கிக் கிடந்தன.

ஆனால், 2003-க்கும் 2008-க்கும் இடையே நிலைமை மாறியது. தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 14 மடங்கு உயர்ந்தது. தொலைத்தொடர்பு வருவாய் 4 மடங்கு அதிகமானது. அந்தத் துறையின் பங்குகள் 4.4 மடங்கு உயர்ந்தன.

2001-ல் செல்போன் வைத்திருந்தோரின் எண்ணிக்கை வெறும் 30 லட்சம்தான். அது 2003-ல் 1.3 கோடியானது. 2008-ம் ஆண்டில் அதுவே 18 கோடியானது. இப்போது 68.8கோடி. 2003-ம் ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகம். 2003-ம் ஆண்டில் 48 ஆயிரம் கோடியாக இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய், 2008-ம் ஆண்டில் 1.69 லட்சம் கோடியானது.

தொலைத்தொடர்புத் துறை எந்த அளவுக்கு வளமானதாக மாறியிருக்கிறது என்பதையும், அந்தத் துறையில் தொழில் செய்யும் நிறுவனங்கள் எந்த அளவுக்கு லாபம் பெறுகின்றன என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதனால், 2008-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் என்பது 2003-ம் ஆண்டைக் காட்டிலும் பலமடங்கு மதிப்புடையதாக மாறியிருக்கும்; அதைப் பெறுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்திருக்கும் என்பதைச் சொல்லியா தெரியவேண்டும்?

]இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 99.3 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறதென்றால், ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு பற்றி வேறென்ன சொல்ல?

2007 செப்டம்பரில் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் குறித்த கொள்கையை அறிவித்தார் அன்றைய அமைச்சராக இருந்த ஆ. ராசா. இது தொடர்பாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 1 என செப்டம்பர் 24-ம் தேதி அறிவித்தார். ஆனால் அவரே ஒருவாரம் கழித்து, செப்டம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு வந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.

அதாவது ஒரே நாள் அவகாசத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்று பொருள். எப்படி இருக்கிறது கதை? அப்படியும், பலர் விண்ணப்பித்திருப்பதால், தனக்கு வேண்டப்பட்டவர்களைத் தவிர ஏனையோரைத் தட்டிக் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

அதன் பிறகு 100 நாள்கள் கழித்து ஜனவரி 10-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அவரிடம் இருந்து இன்னொரு திடீர் அறிவிப்பு பறந்தது. ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பாக செப்டம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களது பிரதிநிதிகளை உடனடியாக அன்றையதினமே மதியம் 3.30-க்குள் அனுப்பி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அரசின் ஒப்புதலைப் பெற்று, அன்று மாலைக்குள் உரிய தொகையைச் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. எப்படி இருக்கிறது பாருங்கள், ஆ. ராசாவின் முறையான ஒதுக்கீட்டுக் கொள்கை. இதற்குப் பெயர்தான் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதாம்.

இந்த அறிவிப்பையடுத்து தில்லி தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் ஒரே தள்ளுமுள்ளு. வரிசையில் முதலில் வருவதற்குக் கடும் போட்டி. இருக்காதா பின்னே? முதலில் வரும் சிலருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்றால் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வராமல் இருக்குமா?

மொத்தம் வந்த 574 விண்ணப்பங்களில் 454 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியாமல் பல விண்ணப்பதாரர்கள் திகைத்தனர். உண்மையில் என்ன நடந்தது என்பது தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்தானே தெரியும்?

இதுபற்றிய சிஏஜி அறிக்கை தெளிவாக நடந்தேறிய நாடகத்தைப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது. "13 விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள்களில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையுடன் தயாராக இருந்தனர்' என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. அதாவது அந்த 13 பேருக்கும் முன்பே தகவல் தெரிந்திருக்கிறது!

ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா! பல கோடிக்கான வங்கி வரைவோலையுடனும், வங்கி உத்தரவாதத்துடனும், தேவையான ஆவணங்களோடும் ஒரு சில நிறுவனங்கள் தயாராக வந்திருந்தன என்றால் அது எப்படி சாத்தியம்? காசோலையை மாற்றுவதற்கே அரைநாள் வேண்டும் என்கிற நிலைமையில் இவர்கள் முன்தேதியிட்ட வங்கி வரைவோலைகளுடன் தயாராக வந்திருந்தார்கள் என்றால் எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்ட சதியல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

உண்மையில் பல மாதங்களுக்கு முன்பே விவகாரம் தொடங்கிவிட்டது. ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறையை நிராகரித்த பிரதமர், வெளிப்படையாக நடந்துகொள்ளும்படி 2007 நவம்பரில் வலியுறுத்தி இருக்கிறார். சில மணி நேரங்களிலேயே அதற்குப் பதிலளித்த ராசா, முந்தைய அரசுகளின் கொள்கைப்படியே தாம் நடந்து கொள்வதாகப் பதிலளிக்கிறார்.

இந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்க ஒருமாத அவகாசம் எடுத்துக் கொண்ட பிரதமர், தான் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக மட்டும் தகவல் அனுப்பினார். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என ராசாவுக்கு அனுமதியளிப்பது போன்றதுதானே இது?

ஜனவரி 10-ம் தேதி ஆ.ராசா தனது மோசடித் திட்டத்தை அரங்கேற்றினார். ஆனால் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.

ஏற்கெனவே இருக்கும் கொள்கையையே தாம் பின்பற்றுவதாக ராசா தம்மிடம் தெரிவித்தார் என்று 15 மாதம் கழித்து 24.05.2010-ல் பிரதமர் ஒப்புக் கொள்கிறார். வெளிப்படையாக நடந்து கொள்ளச் சொன்ன பிரதமரின் தடாலடி பல்டிக்கு என்ன காரணம்? இந்தக் கொள்ளை ரகசியமானது அல்ல; எல்லோருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நாம் அகராதியைப் புரட்ட வேண்டியதில்லை.

இந்தப் பகல் கொள்ளையில் பெரிய கூட்டுச் சதி இருக்கிறது. ராசாவை மட்டுமல்ல, முதலில் ஏனய்யா மறுப்புத் தெரிவித்தீர்கள்? பிறகு ஏன் மெüனமானீர்கள், கடைசியாக ஏன் ஆதரவளிக்கிறீர்கள் என்று பிரதமரையும் அல்லவா கேட்க வேண்டும்!

2ஜி ஊழல் தொடர்பான முறைகேடுகள் மூன்று வழிகளில் கசியத் தொடங்கின. முதலாவது வழி எஸ்டெல் வழக்கு. அனைத்திந்திய உரிமம் பெறுவதற்காக முயன்ற எஸ்டெல் நிறுவனம், உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே ராசாவுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. 1,658 கோடிக்கு விற்பனையாகும் உரிமத்தைத் தங்களுக்கு 13,621 கோடிக்குத் தரும்படி அந்த நிறுவனம் கேட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தில்லி உயர் நீதிமன்றத்தில் எஸ்டெல் முறையிட்டது. அந்த நிறுவனத்தின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உடனே ராசாவின் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்தச் சமயத்தில் என்ன நடந்ததோ, எஸ்டெல் நிறுவனம் தங்கள் மனுவை விலக்கிக் கொண்டு, வழக்கிலிருந்து ஒதுங்கியது. ஆனால், ஊழல் விவகாரம் வெளிவர இந்த வழக்கு உதவியது. எஸ்டெல் வழங்க முன்வந்த தொகையின் அடிப்படையில்தான் 67,300 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்கள். தொலைத் தொடர்புத் துறைக்கு மிகவும் புதியவைகளான இந்த நிறுவனங்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த இரு நிறுவனங்களும் 2ஜி உரிமம் பெற்ற சில வாரங்களில் தங்களது நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை பல மடங்கு லாபத்தில் விற்றன.

1,658 கோடிக்கு உரிமம் பெற்ற யூனிடெக், தனது 67 சதவீதப் பங்குகளை 6,120 கோடிக்கு விற்றது. அதாவது உரிமத்தின் மொத்த மதிப்பு 9,100 கோடி இதேபோல், 1,537 கோடிக்கு உரிமம் பெற்ற ஸ்வான், தனது 44.7 சதவீதப் பங்குகளை 3,217 கோடிக்கு விற்றது. 25 கோடிக்கு சிறிய உரிமங்களைப் பெற்ற எஸ்டெல் நிறுவனம், தனது 5.61 சதவீதப் பங்குகளை 238.5 கோடிக்கு விற்றது. இதன் அடிப்படையில்தான் இழப்பு 57,600 கோடியில் இருந்து 69,300 கோடிவரை இருக்கலாம் என அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சிஏஜி முடிவு செய்திருக்கிறார்.

மூன்றாவதாக, 3ஜி ஏலம். இந்த ஏலத்தில் அரசுக்குக் கிடைத்த வருவாயின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மதிப்பு கணக்கிடப்பட்டதில் அரசுக்கு 1,76,645 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைதான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியாகி பரபரப்புக்குள்ளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்திருப்பது வெளிப்படையான மோசடி. திருவாளர் பரிசுத்தம், கறையே படியாத கரங்களுக்குச் சொந்தமானவர், நேர்மையின் மறு உருவம் என்றெல்லாம் கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் என்று தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்ளும் சோனியா காந்திக்கும் தெரிந்தேதான் இது நடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ராசாவின் அமைச்சகத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ராசா தெளிவாகத் திருப்பிக் கேட்டார், "எல்லாவற்றையும் பிரதமருடன் ஆலோசித்துத்தான் செய்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, முந்தைய ஒதுக்கீடுகளைப் போல நடந்திருக்கிறது. பிறகு, நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்?' என்று!

ராசாவின் கருத்தை பிரதமர் மறுக்கவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து கடந்த மே மாதம், "இந்த விவகாரம் குறித்து ராசா தம்முடன் ஆலோசனை நடத்தினார்' என்று பிரதமர் ஒப்புக்கொண்டார். பிரதமருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிடத் தெளிவான வாக்குமூலம் வேறென்ன வேண்டும்?

முதலில் "நிராகரிப்பு', பின்னர் "தடை எதுவும் இல்லை', அதன் பிறகு "ஒப்புதல்' என தனது நிலையை பிரதமர் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது சிஏஜி அறிக்கை மூலம் மோசடிகள் அம்பலமாகியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் உள்பட நாட்டில் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிய பிறகும் வாயைத் திறக்க மறுக்கிறாரே ஏன்? பிரதமருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லையா?

ராசா விஷயத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது உங்கள் பதவிக்கே கூட ஆபத்தாக முடியலாம் என 2007-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் யாராவது பிரதமருக்கு உணர்த்தியிருப்பார்கள். இல்லாவிட்டால் ராசாவின் செயலை முதலில் நிராகரித்தவர், ஏற்றுக் கொள்ளாதவர், எச்சரித்தவர், பிறகு ஏன் பார்த்தும் பார்க்காமல் மெüனம் சாதித்தார்? அப்படி, பிரதமர் மன்மோகன் சிங்கின் கையையும் வாயையும் கண்களையும் கட்டிப் போடும் சக்தி ஒருவருக்குத்தான் உண்டு. அது நிச்சயமாக சோனியா காந்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

கதை இன்னும் தொடர்கிறது. 2ஜி விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தவை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. ஒருகையில் டாடா குழுமத்தையும் மறு கையில் ரிலையன்ஸ் குழுமத்தையும் வைத்திருக்கும் நீரா ராடியா, தில்லி அரசியல் வட்டத்தில் செல்வாக்குப் படைத்தவர். 9 தொலைபேசிகள் மூலமாக 180 நாள்கள் அவர் நிகழ்த்திய உரையாடலை வருமான வரித்துறை சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்தது. சிபிஐயின் வேண்டுகோள்படி 20.11.2009-ம் தேதி நடந்த உரையாடலின் சிறு பகுதியை மட்டும் விசாரணைக்காக அது வழங்கியது. அந்தச் சிறுபகுதியே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் கிழித்துப் போட்டிருக்கிறது.

ராடியாவின் 5,800 தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இணையத்தில் கிடைப்பது 104. அவற்றில் 23 மட்டுமே எழுத்து வடிவமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தையும் தோண்டினால் இன்னும் என்னென்ன பூதங்களெல்லாம் கிளம்புமோ?

வருமானவரித்துறை சிபிஐக்கு அனுப்பிய குறிப்பில் கீழ்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன. முதலாவது, ராடியாவும் ராசாவும் நெருக்கமானவர்கள். யூனிடெக், ஸ்வான், டேடாகாம் நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுத்ததில் ராடியாவுக்குப் பங்குண்டு.

இரண்டாவது, தான் அனுமதி வழங்கிய தொலைத்தொடர்பு உரிமத்திலேயே ராசாவுக்குப் பங்கு உண்டு.

மூன்றாவது, ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக்குவதற்கு பர்கா தத், வீர் சாங்வி ஆகிய பத்திரிகையாளர்கள் வழியாக ராடியாவும் கனிமொழியும் முயன்றிருக்கிறார்கள்.

நான்காவது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டரும் ராடியாவும் நெருக்கமானவர்கள்.

ஐந்தாவது, யூனிடெக், ஸ்வான் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் ராடியா உதவி செய்திருக்கிறார்.

இந்த ஐந்தும் சிறு துரும்புதான். முழு விவரமும் இன்னும் வெளிவரவில்லை.

ராசாவுக்கு தொலைத்தொடர்புத்துறை கிடைப்பதை முதலில் அவரிடம் உறுதி செய்வதே ராடியாதான். தொலைபேசி உரையாடலில் அது தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு நெருக்கடி கொடுப்பது பற்றிக் குறிப்பிட்டு வீர் சாங்வியுடன் ராடியா பேசும்போது, "ஸ்டாலினின் அம்மா தயாளுவிடம் ரூ.600 கோடியை தயாநிதி மாறன் கொடுத்திருப்பார்' எனக் குறிப்பிடுகிறார்கள். வெட்கமே இல்லாமல் அமைச்சர் பதவி விற்கப்பட்டிருக்கிறது. அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாகியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

2ஜி விவகாரத்தில் ராசா மட்டும் தனியொருவராகக் கொள்ளை அடித்திருக்க முடியாது. முக்கியப் பயனாளிகள் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமரையே எதிர்க்கும் அளவுக்கு ராசாவுக்கோ அல்லது திமுகவுக்கோ தைரியமும் கிடையாது, திறனும் கிடையாது. திமுக வெளியேறிவிட்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால்தான் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பின்னணியில் இருப்பது யார்? அது நிச்சயமாக, கருணாநிதியோ, கனிமொழியோவாக இருக்க முடியாது. அவர்களுக்குப் பயந்து பிரதமர் மெüனம் சாதித்திருக்க முடியாது. பிரதமரை விட அதிக அதிகாரம் கொண்ட ஒருவர்தான் இந்த மோசடியை பின்னால் இருந்து நடத்தியிருக்கிறார். அவர் யாராக இருக்க முடியும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

அந்த உண்மை வெளிவந்தால்தான் பிரதமரின் ஆலோசனையை ராசா மீறியது ஏன் என்பதும், பிரதமர் அவ்வப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பதையும், இந்த மெகா மோசடியின் பின்னணிதான் என்ன என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும்.

அதனால்தான் அதை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடம்பிடிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்குத்தான், பிரதமர் உள்பட யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு விசாரிக்க அதிகாரம் உண்டு. அதனால்தான் கூட்டுக் குழு என்று சொன்னாலே அரசு தரப்பு பயப்படுகிறது. அதை எதிர்க்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர். சரி, சோனியாஜி சொல்வதை ஏற்றுக் கொள்வோம். அப்படியானால், 2ஜியின் பின்னணியில் இருக்கும் அந்த "ஜி' யார்?

நன்றி தினமணி