Friday, October 15, 2010

தென் திருப்பதியில் வழிப்பறி?

புரட்டாசி மூன்றாம் சனி அன்ன்றைக்கு பெருமாளை தரிசனம் செய்தால் நல்லது என்று நவதிருப்பதி கோவில்களுக்கு குடும்பத்துடன் புறப்பட முடிவுசெய்தோம்.

அதன்படி நவ வரிசைப்படி ஒவ்வொரு திருத்தலங்களாக தரிசித்து வந்தோம்.இந்த ஒன்பது கோவில்களில் ஏழு கோவில்களில் கட்டணம் செலுத்தி மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது .இலவச தரிசனங்கள் இந்த கோவில்களில் இல்லை.மூலவர் தரிசனம் 2 ரூபாய் , சிறப்பு தரிசனம் 10 ரூபாய் கட்டணம் .

கட்டணம் வசூல் செய்யும் ஏழு கோவில்களில் இரண்டு கோவில்களை பிரபல டி.வீ.எஸ். நிறுவனம் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது .

எனக்கு ஒன்று மட்டும் கடைசி வரை புரிய வில்லை!!
ஏன் இந்த கட்டண வசூல் ?
இறைவனை இல்லாதவர்கள் தரிசிக்க கூடாது என்றா ?
கோவில் வளர்ச்சிக்கு என்றா ?

விருப்ப பட்டவர்கள் தானாக காணிக்கை செலுத்த முன் வரும் போது ஏன் இந்த கட்டணம் ?

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கூட இலவச தரிசன சேவை என்று உண்டு.நம் தமிழக தென் மாவட்ட தென் திருப்பதியில் ஏன் இந்த வழிப்பறி?

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

sad, may be for the renovation/maintenace

Post a Comment